Aug 22, 2026 - 05:25 PM





பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொலிஸ் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் வழக்கம் போல் சமர்ப்பிக்க முடியும்.
இதற்கு முன்னர் clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தற்காலிக வழிமுறையைப் பின்பற்றுவதற்கு வாய்ப்புளிக்கப்பட்டிருந்தது.
எனவே, தரவு அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் வழக்கம் போல் உரிய கட்டணங்களைச் செலுத்தி, இணையவழி முறைமையின் (Online system) ஊடாக மீண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

























