Aug 28, 2026 - 12:31 PM





அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு மனு சிஹல உருமயவின் தலைவர் சரத் மனமேந்திரவாலும், மற்றைய மனு ஓய்வுபெற்றோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேராவாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.























