Header Logo
SLIC
செய்திகள்
ஜெ. ஆர். செய்யாத சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது

Aug 30, 2026 - 11:02 PM

ஜெ. ஆர். செய்யாத சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது
Mobitel Inner 1278
EDEX Inner

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவும் செய்யாத அளவிலான சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். 

மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத இடத்திற்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

புத்தலயில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

சர்வஜன அதிகாரத்தின் மொனராகலை மாவட்ட தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் புத்தல சந்தை வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வு சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்றது. 

இதில் மேலும் உரையாற்றிய அவர், "மற்றொரு ராஜபக்ஷவின் உருவம் வருகிறது என்று கூறி டோபி கமென்ட் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. 2014ல், இன்று அமெரிக்காவிற்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்த நாட்டின் தேசியவாத அரசியலை அழித்த, இன்றும் அழித்துக்கொண்டிருக்கும் பெசில், சதித்திட்டம் தீட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தி மகிந்தவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு விரைவாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவோடு செயல்பட்டபோது, நாம் வேதனையடைந்து ஒதுங்கி நின்றோம். இன்று நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, இந்த நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்ட சவாலுக்கு உள்ளாகியுள்ளது. ஜே.ஆர். ஜயவர்தன கூடக் கூறவில்லை, 'எனக்கு வேண்டியதை நான் செய்வேன், மகாநாயக்க தேரர் கூறினாலும் கேட்கமாட்டேன்' என்று. இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் அவ்வாறு கூறியதில்லை, இந்த ஜனாதிபதி மட்டுமே கூறினார். அப்படியானால், இவ்வளவு சர்வாதிகாரமிக்க ஒரு ஜனாதிபதியை உருவாக்க இந்த நாட்டு மக்கள் செயல்படவில்லை, இந்த நாட்டின் சுயநலமிக்க அரசியல்வாதிகளே செயல்பட்டனர். அதைச் செய்தது இந்த நாட்டு மக்கள் அல்ல, அரசியல்வாதிகளே. உங்களின் ஒவ்வொருவரது முகத்தைப் பார்க்கும்போதும் எனக்கு ஏற்படும் மனவருத்தம்... அதிலிருந்து மேலெழும் மனசாட்சிக்கு எதிராக என்ன அரசியலைச் செய்வதற்காக நாம் வந்திருக்கிறோம்? 

உங்களது வாக்குகளைப் பெற்றுச் சென்று இந்த நாட்டின் ஜனாதிபதியானாலும், மனசாட்சிக்கு உண்மையாய் இந்த அரசியலைச் செய்யாவிட்டால் எந்தப் பயனுமில்லை. நாம் செய்யும் இந்த அரசியல், முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டுவதற்காகச் செய்யப்படும் ஒன்றாகும். அதற்காக அந்தப் கட்சிகளுக்குத் முட்டுக் கொடுக்கிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் கட்சிகளுக்கு முட்டுக் கொடுக்கவோ, தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்ததால் தந்தையின் உரிமையினால் தலைமைத்துவம் சொந்தம் என்று யாராவது நினைத்துக்கொண்டிருந்தால், அது மாறவேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த நாட்டில் எதுவும் தந்தையின் உரிமையால் கிடைக்காது, தங்களுக்கு ஒரு உரிமை இருக்கிறது என்றால் அந்த உரிமை இந்த நாட்டு மக்களின் அன்பின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதை அவரவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்." என்றார்.

 


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278