Aug 31, 2026 - 11:39 AM





கயாடு தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். சூர்யா, நானி, துல்கர் சல்மான் என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.
அதிலும் இவர் நடிப்பில் வெளியான ட்ராகன், இதயம் முரளி ஆகிய இரண்டு படங்களும் செம ஹிட் ஆக, இவரின் மார்க்கெட் நன்றாக உயர்ந்துள்ளது. இவர் துல்கருக்கு ஜோடியாக நடித்த ஐயம் கேம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது நடிகை சம்யுக்தா நடிகர் கதிர், கயாடு எல்லோரும் நிற்க ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து எல்லோரும் ஒவ்வொரு வாய் குடித்தனர், பாட்டிலில் வாய் படாமல், ஆனால், கயாடு வாய் வைத்து குடிக்க, பிறகு எல்லோரும் இதை குடிக்க வேண்டுமே என ஒரு நொடி யோசித்து கயாடு மன்னிப்பு கேட்டார்.
எல்லோரும் பரவாயில்லை என சொல்ல உடனே அருகில் இருந்த சம்யுக்தா பாட்டிலை வாங்கி துடைத்து கதிரிடம் கொடுத்தார். இந்த தருணம் தற்போது செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.























