Aug 31, 2026 - 10:22 PM





ஜா-எல, பமுனுகம எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (30) பிற்பகல் குறித்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் தனது மகள் மற்றும் மேலும் இரு சிறுவர்களுடன் இராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு கடலில் நீராடச் சென்று காணாமல் போனவர்களில் பெண்ணின் சடலமும் இரண்டு சிறுமிகளின் சடலங்களும் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆவர்.























