Sep 5, 2026 - 11:23 PM

பேலியகொடை மேனிங் வர்த்தக வளாகத்தில் முறைசாரா முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்துவதற்காக புதிய திட்டமொன்றை ஆரம்பிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதன்கீழ், அடையாளங்காணப்பட்ட வர்த்தகர்களுக்கு முறைசார்ந்த நடமாடும் வர்த்தகக் சாவடியொன்றும், அதற்குரிய விசேட பொருட்கள் அடங்கிய தொகுதியும் இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான நடமாடும் வர்த்தகக் சாவடி மற்றும் அதற்குரிய பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கும் நிகழ்வு நேற்று (04) கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் புதிய மேனிங் வர்த்தக வளாகத்தில் நடைபெற்றது.
இதன்மூலம் நுகர்வோருக்கு சுத்தமான மற்றும் உயர்தரமான உணவை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதுடன், புதிய மேனிங் வர்த்தக வளாகத்திற்குள் நடமாடும் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.



























