Header Logo
Vallibel FD
செய்திகள்
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சிறப்புச் சான்றிதழ் வழங்கி கௌரவம்!

Sep 9, 2026 - 10:42 AM

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சிறப்புச் சான்றிதழ் வழங்கி கௌரவம்!
Mobitel Inner 1278

மலேரியா மற்றும் தாய்மார்கள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி (Tetanus) நோய்களை வெற்றிகரமாக ஒழித்த நிலையை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வருவதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு சிறப்பு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

 

திமோர்-லெஸ்தேயின் டிலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது அமர்வின் போது சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் இந்த மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸினால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பதிகாரி கலாநிதி நிலேஷ் புத்தா என்பவரின் கையொப்பத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளது.

 

இலங்கை 2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் மலேரியா அற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது. அன்றிலிருந்து 10 ஆண்டுகள் முழுவதும் நாட்டிற்குள் மலேரியா மீண்டும் பரவுவதைத் தடுத்து, அந்த நிலையைத் தொடர்ந்து பேணி வந்தமை இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

மாலத்தீவுக்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடு இலங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன், தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி நோயை வெற்றிகரமாக ஒழித்த நிலையையும் இலங்கை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வந்தமை இதன்போது பாராட்டப்பட்டுள்ளது.

 

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக வழங்கப்படும் ரணஜன்னி தடுப்பூசி திட்டமும் நாடு முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இலங்கை பெற்றுள்ள வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட ஆரம்ப சுகாதார அமைப்பு, தொடர்ச்சியான தேசிய அர்ப்பணிப்பு, உயர் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் திறமையான நோய் புலனாய்வு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் காரணமாகவே இந்த சுகாதார சாதனைகளை எட்ட முடிந்தது என்றும், அவற்றை நீண்டகாலம் பேண முடிந்தது என்றும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த சாதனைகள் வெறும் சுகாதார மைல்கற்கள் மட்டுமல்ல, இலங்கை மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதையும் மேலும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதையும் உறுதி செய்வதாக உலக சுகாதார அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

Mobitel 1278