Sep 9, 2026 - 01:03 PM

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி', கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று (09) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



























