Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
சுகாதாரச் சேவை முடங்கும் அபாயம்: GMOA எச்சரிக்கை!

Sep 11, 2026 - 05:26 PM

சுகாதாரச் சேவை முடங்கும் அபாயம்: GMOA எச்சரிக்கை!
Mobitel Inner 1278

சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாகத் திருத்தப்படவில்லை என்பதால், ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையாக வலியுறுத்தியுள்ளது. 

தசாப்த கணக்கில் குறைந்த செலவில் உயர் செயல்திறனைக் காட்டி சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற இலங்கையின் சுகாதாரச் சேவை, தற்போதைய நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான பிரச்சினைகளுக்கு மத்தியில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் தெரிவித்துள்ளது. 

சாதாரணமாகச் சுகாதாரப் பணியாளர்களை சரியான தரம் மற்றும் எண்ணிக்கையில் பேணுவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அமைச்சினால் பணியாளர் வெற்றிடங்கள் திருத்தப்பட வேண்டும் என்றபோதிலும், நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் முழுமையான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசிப் பணியாளர் திருத்தம் 2015ஆம் ஆண்டிலேயே பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், கடந்த தசாப்தத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஏனைய வைத்திய நடைமுறைகள் அத்துடன் பரிசோதனைகளின் அளவும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதுதவிர, புதிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரச் சேவை பிரிவுகளை நிறுவுதல், சிகிச்சை சேவைகளின் சிக்கலான தன்மை மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகளின் பயன்பாடு அதிகரிப்பு என்பன 2015ஆம் ஆண்டில் நிலவிய பழைய அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வரம்புகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக, சேவைகள் மேலும் விரிவடைவதோடு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களைப் புதிதாக இணைத்துக்கொள்ளும் செயற்திட்டத்திற்கு கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாகக் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் சுகாதாரச் சேவைக்கு ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலைமை தொடர்பாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் சுகாதார அமைச்சுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என அச்சங்கம் குறிப்பிடுகிறது. 

உலக சுகாதார அமைப்பினால் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் முறைகள் காணப்படுகின்ற போதிலும், இலங்கையின் சுகாதார அமைச்சு அத்தகைய சரியான முறையைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை என்றும், இது தொடர்பில் இரு வாரங்களுக்கு முன்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வினவியபோதிலும் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது. 

தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் சுகாதாரச் சேவையின் மறுசீரமைப்புகள் மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக்க வேண்டுமாயின் பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவை அவசியமானது என்பதால், உடனடியாகச் சுகாதாரப் பணியாளர் வெற்றிடங்களைத் திருத்தியமைக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278