Sep 19, 2026 - 09:55 PM

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் 3-0 என இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.
மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெந்திஸ் 35 ஓட்டங்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினர்.
125 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்தார். அணித்தலைவர் ஹேரி புரூக் 33 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சோனி பேக்கர் தட்டிச் சென்றார்.





























