Dec 28, 2025 - 10:41 AM -
0
சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும், இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
திருவனந்தபுரத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் ஐந்து டி -20 போட்டிகளைக் கொண்ட தொடராக இது அமைந்துள்ளது.
இதுவரை நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, ஏற்கனவே இந்த இருபதுக்கு-20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

