Header Logo

செய்திகள்
வெசாக் வாரத்திற்காக தளர்த்தப்படும் எரிபொருள், மின்சார விதிமுறைகள்

May 21, 2026 - 09:54 AM -

0

வெசாக் வாரத்திற்காக தளர்த்தப்படும் எரிபொருள், மின்சார விதிமுறைகள்

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


புத்த ரஷ்மி வெசாக் வலயம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்ற போதே இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.


இதற்கமைய, வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதுடன், வெசாக் வலயப் பணிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகளின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.


தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுடன், கொள்கை வழிபாட்டிற்கு முதலிடம் வழங்கி, ஆமிச வழிபாட்டின் மூலம் பக்தர்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் வெசாக் வலயத்தை அலங்கரிப்பதற்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இம்முறை வெசாக் வலயம் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title