Jan 1, 2026 - 08:10 PM -
0
20 அணிகள் இடையிலான 10 ஆவது ஐ.சி.சி. டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றனர். இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்து விட்டனர். மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கபடாமல் உள்ளது.
இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கான அனைத்து அணிகளும் ஜனவரி 31 ஆம் திகதி வரை தங்கள் அணியில் மாற்றங்களைச் செய்யலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.

