Header Logo

விளையாட்டு
சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை!

Jan 12, 2026 - 12:12 PM -

0

சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி நேற்று (11) வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. 

அதன்படி முதலில் துடுபெடுத்தாடிய நியூசிலாந்து 300 ஓட்டங்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

301 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 306 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. 

இந்நிலையில் 40 ஆவது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இப்போட்டியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் கோலி. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி தனது 624 ஆவது இன்னிங்ஸில் இந்த சாதனையை அடைந்தார். 

சச்சின் டெண்டுல்கர் (644 இன்னிங்ஸ்) மற்றும் இலங்கை வீரர் குமார் சங்கக்கார (666 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், 34,357 ஓட்டங்களை குவித்து, இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title