Mar 30, 2026 - 11:57 PM -
0
கஹவத்தை, நீலகம பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போயிருந்த மாணிக்கக்கல் வர்த்தகரின் சடலம், இன்று (30) சுரங்கக் குழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கஹவத்தை - நீலகம வீதியில் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் மாயமானமை தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
கடந்த 28ஆம் திகதி பகல் வேளையில், குறித்த வர்த்தகர் கஹவத்தை - நீலகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர், அவரது மோட்டார் சைக்கிள் அவ்வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டறியப்பட்டதுடன், நேற்றைய தினம் (29) அவரது கைபேசியும் அதே வீதிக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
