Header Logo

வணிகம்
ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் Guru Buhuman காப்புறுதித் தீர்வின் மூலம் ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு SLIIT உடன் மூலோபாயக் கூ

Mar 31, 2026 - 04:13 PM -

0

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் Guru Buhuman காப்புறுதித் தீர்வின் மூலம் ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு SLIIT உடன் மூலோபாயக் கூ

இலங்கையில் மிகவும் நம்பிக்கையைப் பெற்ற முதல்தர ஜெனரல் காப்புறுதி வழங்குனரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், கல்வித் துறையுடன் கொண்டுள்ள தனது ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (SLIIT) மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தி தேசிய கல்வியாளர் விருதுகள் (NEA) முயற்சியில் உத்தியோகபூர்வ காப்புறுதிதாரராக இணைந்துள்ளது. இது நாட்டின் ஆசிரியர்களை உயர்த்திப் போற்றுவதோடு, அவர்களை பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமான முக்கியமான திட்டமாகும். 

தேசிய கல்வியாளர் விருதுகள் (NEA) என்பது தங்களது கல்வித் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ள இலங்கையின் சிறந்த கல்வியாளர்களை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கௌரவத்திற்குரியதொரு முயற்சியாகும். அடுத்த தலைமுறையினை உருவாக்குவதில் பாதுகாவலர்களாக விளங்கும் ஆசிரியர்களைக் கௌரவித்து பாதுகாக்கும் வகையில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தால் ஆசிரியர்களுக்காக தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் காப்புறுதித் திட்டம் ‘Guru Buhuman’ என்பது. 

தேசிய கல்வியாளர் விருதிற்கு ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் திட்டத்தின் ஊடாக கல்வியாளர்களை வலப்படுத்துவது என்ற நோக்கத்தில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்திற்கும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையில் 2024-2025ஆம் ஆண்டில் முதல் தடவையாக கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டது. முன்னோடியாக ஆரம்பமான இந்தக் கூட்டாண்மைக்கு கல்வியாளர்களிடமிருந்து கிடைத்த சாதகமான ஈடுபாடு அதிகரித்திருப்பதுடன், கல்வித்துறையிடமிருந்து சிறந்த வரவேற்பும் கிடைத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேசிய கல்வியாளர் விருதுக்கு ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் உத்தியோகபூர்வ காப்புறுதிதாரராக இணைந்துகொண்டுள்ளது. காப்புறுதித் திட்டமானது பெரும்பாலும் ஆசிரியர்கள் தமது நாளாந்த வாழ்க்கையிலும் வீட்டிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் வகையில் ரூ 1,000,000 தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி, ரூ 3,000,000 வீட்டுக் காப்புறுதித் திட்டங்களை ‘Guru Buhuman’ உள்ளடக்கியுள்ளது. 

ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் பாரம்பரிய பரிசுகளுக்கு மாற்றீடாக ‘Guru Buhuman’ திட்டம் அமைந்துள்ளது. கட்டுப்படியாகக் கூடிய தவணைக் கட்டணத்துடன் அவர்களுடைய வீடு மற்றும் வாழ்க்கைத்தரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற மன நிம்மதியை வழங்கக் கூடிய பரிசினை பெற்றோர்களும், மாணவர்களும் தமது ஆசிரியர்களுக்கு வழக்க முடியும். 

இலங்கையின் தேசிய காப்புறுதிதார் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் வர்த்தக ரீதியான நோக்கங்களுக்கு அப்பால் தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது. ‘Guru Buhuman’ அந்த உறுதிப்பாட்டின் நேரடியான வெளிப்பாடாகும். இது ஆசிரியர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட விசேட திட்டம் என்பதுடன், நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை இது உறுதிப்படுத்துகிறது. 

மேலும், பொதுக் காப்புறுதி மற்றும் மோட்டார் காப்புறுதிக்கு இது வாழ்வாதாரங்களை, வீடுகளை மற்றும் சமூகங்களையும் பாதுகாப்பதை நோக்காகக் கொண்டுள்ளது. ‘Guru Buhuman’ மூலம் இலங்கை நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் நற்பணியாற்றுபவர்களிடமிருந்து நாட்டின் தேசிய காப்புறுதிதாரர் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் கல்வியாளர்களுக்கு மனஅமைதியை வழங்குகிறது.

Comments
0

MOST READ

காணொளி
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

title