Header Logo

இந்தியா
தமிழ்நாட்டில் நான்கு கட்சித் தலைவர்கள் தோல்வி!

May 4, 2026 - 09:49 PM -

0

தமிழ்நாட்டில் நான்கு கட்சித் தலைவர்கள் தோல்வி!

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக, நாதக என நான்குமுனை போட்டி நிலவியது. 

இதில் திமுக கூட்டணியே பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. எதிர்க்கட்சியாக அதிமுக வரும் என தெரிவித்தன. ஆனால் ஆக்ஸிஸ் மை இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவிடுப்பொடியாகியுள்ளன. 

நடிகர் விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 74 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் இத்தேர்தலில் போட்டியிட்ட நான்கு கட்சித் தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். 

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியை தழுவியுள்ளார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் தோல்வியை தழுவியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தவெக வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வியை தழுவியுள்ளார். 

சாத்தூரில் போட்டியிட்ட பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனும் தோல்வியை தழுவியுள்ளார். அங்கு திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வெற்றிப் பெற்றுள்ளார். 

இவர்களை தாண்டி முதலமைச்சர் வேட்பாளரான நாதக தலைவர் சீமான் டெபாசிட் கூடப் பெறாமல் தோல்வியைத் தழுவியுள்ளார். காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், தவெக வேட்பாளர் பிரபுவிடம் தோல்வியை தழுவினார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title