May 5, 2026 - 03:09 PM -
0
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களுக்கும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
