Header Logo

செய்திகள்
செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை

May 5, 2026 - 07:23 PM -

0

செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம் நாளான இன்று (05), குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

 

அத்துடன், தங்கம் எனச் சந்தேகிக்கப்படும் ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

 

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகளிலிருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் மற்றுமொரு எலும்புக்கூடு என இரண்டு தொகுதிகள் இன்று மீட்கப்பட்டன.

 

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தம் 255 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

 

அவற்றில் 249 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அகழ்வுப் பணியின் போது புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய கருப்பு நிற மண்ணிலிருந்து, எரிந்த நிலையிலான சில எலும்புத் துண்டுகளும் நாணயக் குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

 

மேலும், உடைந்த நிலையிலான மூக்குத்தி போன்ற சிறிய தங்க ஆபரணம், ஆணிகள், மரப்பெட்டியின் சிதைவுகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

குழந்தையின் எலும்புக்கூடு மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், அதனை நேரடியாக மண்ணிலிருந்து பிரித்தெடுக்க முடியவில்லை. இதனால், பாதுகாப்பு கருதி எலும்புக்கூட்டைச் சுற்றி பேண்டேஜ் துணிகளால் கட்டப்பட்டு, மண்ணுடன் சேர்த்து பக்குவமாக அகழ்ந்தெடுக்கப்பட்டதாக சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

யாழில் தவெக வெற்றி கொண்டாட்டம்!

யாழில் தவெக வெற்றி கொண்டாட்டம்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 07 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 07 ஆம் நாள் அகழ்வுகள்!

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி