Header Logo

செய்திகள்
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய போலி வைத்தியர் பொலன்னறுவையில் கைது

May 6, 2026 - 12:17 PM -

0

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய போலி வைத்தியர் பொலன்னறுவையில் கைது

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபராவார்.

 

பொலன்னறுவை தீப உயன அருகில் வைத்து நேற்றிரவு (05) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

பொரளை, கண்டி, மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களால் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவர் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த நபர் என்பது ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இந்த போலி வைத்தியரிடமிருந்து வைத்தியர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப், வைத்தியர்களுக்கான சீருடை மற்றும் போலி அடையாள அட்டை உள்ளிட்ட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

ஹிங்குரக்கொடை வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியராக சந்தேக நபர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

சந்தேக நபர் இன்று (06) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title