Header Logo

சினிமா
பிரபல நடிகர் வீதி விபத்தில் உயிரிழப்பு!

May 6, 2026 - 12:51 PM -

0

பிரபல நடிகர் வீதி விபத்தில் உயிரிழப்பு!

பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே நாயர் வீதி விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி. திரையுலகில் கதாநாயகனாக நடித்த சந்தோஷ் கே நாயர் அதன் பின்னர் வில்லன், நகைச்சுவை நடிகர் என பல வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். 

இந்த நிலையில், அவர் நேற்று (05) தனது மனைவியுடன் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஈனாத்து பகுதி அருகே சென்றபோது, அவர்கள் சென்ற கார் மீது வேன் ஒன்று வேகமாக மோதியது. 

இந்த விபத்தில் சிக்கி சந்தோஷ் கே.நாயர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மறைவு மலையாள திரையுலகம், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சந்தோஷ் கே நாயரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

நடிகர் மம்முட்டி பேஸ்புக்கில் வெளியிட்ட இரங்கல் பதிவில், "நாங்கள் இணைந்து பணியாற்றிய தருணங்களை அன்புடன் நினைவு கூர்ந்து பார்க்கிறேன். 

இந்த கடினமான நேரத்தில், அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் என் நினைவுகள் உள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் மறைந்த நடிகர் சந்தோஷ் கே நாயருக்கு இரங்கல் தெரவித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!