Header Logo

செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரிப்பு

May 6, 2026 - 01:42 PM -

0

 இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்காக விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை  உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கான வரி 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்த திருத்தப்பட்ட வரி வீதமானது 2026 மே மாதம் 5 ஆம் திகதி முதல் 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


அத்துடன், 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2469/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் காணப்பட்ட முன்னைய வரி விதிமுறையும் இதனுடன் திருத்தப்பட்டுள்ளது.


நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2026 மே மாதம் 04 ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

யாழில் தவெக வெற்றி கொண்டாட்டம்!

யாழில் தவெக வெற்றி கொண்டாட்டம்!