Header Logo

செய்திகள்
மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை

May 23, 2026 - 04:15 PM -

0

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 

இந்தச் சம்பவத்தில் மில்ல கலேவத்தை, பிபில வீதி, மொனராகலை எனும் முகவரியைச் சேர்ந்த உலகநாதன் திலீப் மதுஷங்க எனும் 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

 

இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த நபர் மொனராகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் பலத்த காயமடைந்த நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title