Header Logo

செய்திகள்
LPL தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு

May 23, 2026 - 05:24 PM -

0

LPL தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு

இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (23) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தொடருக்காக ஐசிசி (ICC) முழு அங்கத்துவம் பெற்ற அனைத்து நாடுகளின் வீரர்களும், அத்துடன் சில அசோசியேட் நாடுகளின் வீரர்களும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 இதன்படி, உலகெங்கிலும் உள்ள 21 நாடுகளில் இருந்து வீரர்கள் இம்முறை பதிவு செய்துள்ளனர்.

 

பதிவு செய்தவர்களில் அதிகபட்சமாக பாகிஸ்தானில் இருந்து 102 வீரர்கள் உள்ளனர். 

 

மேலதிகமாக மேற்கிந்திய தீவுகள் (75), தென்னாப்பிரிக்கா (66), பங்களாதேஷ் (48), நியூசிலாந்து (41), அவுஸ்திரேலியா (24), இங்கிலாந்து (15) மற்றும் இந்தியா (12) ஆகிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் பதிவு செய்துள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அசோசியேட் நாடுகளின் வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

 

பதிவு செய்துள்ள மொத்த வீரர்களில் 310 பேர் விசேட மதிப்பீட்டு செயல்முறைக்குப் பின்னர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

 

இதற்கமைய, அந்த வீரர்கள் ஜூன் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ள LPL உத்தியோகபூர்வ பிளேயர் டிராப்ட் நிகழ்வில் உள்ளடக்கப்படுவர். 

 

6ஆவது முறையாக நடைபெறவுள்ள LPL கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title