Header Logo

செய்திகள்
வாக்குமூலம் அளிக்க விமல் வீரவன்சவுக்கு பொலிஸார் அழைப்பு

May 23, 2026 - 08:21 PM -

0

வாக்குமூலம் அளிக்க விமல் வீரவன்சவுக்கு பொலிஸார் அழைப்பு

பத்தரமுல்லை போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக பொலிஸாரால் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை தலாங்கம பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக அவர் கூறினார்.


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,


"நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில், போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தச் சென்றோம். அதற்குத் தடையை ஏற்படுத்தியவர்கள், இப்போது வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு எமக்கு அறிவித்துள்ளனர். சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், நீதி அமைச்சிற்குச் சொந்தமான மல்வானை மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் செயற்படவில்லை. நாம் பொது இடத்திற்கே சென்றோம். எமக்கு ஒரு விதமான சட்டமும், அந்த மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் மௌனமாகவும் இருக்கின்றது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title