Header Logo
SLIC
வணிகம்
இலங்கை கிரிக்கெட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் வலுச்சேர்க்கும் 2026 எல்.பி.எல் வீரர்கள் வரைவு வெற்றிகரமாக நிறைவு

Jun 16, 2026 - 07:54 AM

இலங்கை கிரிக்கெட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் வலுச்சேர்க்கும் 2026 எல்.பி.எல் வீரர்கள் வரைவு வெற்றிகரமாக நிறைவு
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் முன்னணி பிரான்சைஸ் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரின் ஆறாவது அத்தியாயத்துக்கான வீரர்கள் வரைவை (Player Draft) IPG நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தியது. 

வரவிருக்கும் சீசனுக்கான தங்களது அணிகளை ஐந்து பிரான்சைஸ் அணிகளும் இறுதி செய்த இந்த வீரர்கள் வரைவு நிகழ்வில், அணி உரிமையாளர்கள், அணிப் பிரதிநிதிகள், கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். முன்னணி இலங்கை மற்றும் சர்வதேச வீரர்கள் பலர் இந்த வரைவில் இடம்பெற்றிருந்த நிலையில், 2026 லங்கா பிறீமியர் லீக் தொடரானது முன்னணி வீரர்கள், வளர்ந்து வரும் வீரர்கள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய டி20 நட்சத்திரங்களின் கலவையுடன் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொடராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரைவு நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, ஒரு தொழில்முறை கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு அங்கமாக லங்கா பிரீமியர் லீக் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதைக் காட்டுகிறது. 

மேலும், இந்தத் தொடரின் கட்டமைப்பு, வணிக ரீதியிலான சாத்தியக்கூறுகள் மற்றும் இலங்கையின் கிரிக்கெட் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அதன் பங்கு ஆகியவற்றின் மீது அணிகளின் உரிமையாளர்களும், வீரர்களும் கொண்டுள்ள நம்பிக்கையையும் இது வெளிப்படுத்துகிறது. இதன்படி, ஜஃப்னா கிங்ஸ், கோல் கேலண்ட்ஸ், கண்டி றோயல்ஸ், கொழும்பு கேப்ஸ் மற்றும் தம்புள்ள சிக்சர்ஸ் ஆகிய ஐந்து அணிகளும், நடப்பு சீசனுக்கு முன்னதாக அணித் திட்டமிடல், வியூகங்களை வகுத்தல், வீரர்களை ஒருங்கிணைத்தல், ரசிகர்களைக் கவர்தல் மற்றும் வணிக ரீதியிலான செயல்பாடுகள் உள்ளிட்ட அடுத்தகட்ட ஆயத்தப் பணிகளில் ஈடுபடவுள்ளன. 

இந்த வீரர்கள் வரைவின் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்றுப் பேசிய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, “இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழில்முறை கிரிக்கெட்டை வலுப்படுத்துவதிலும், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கான ஒரு சிறந்த இடமாக இலங்கையை நிலைநிறுத்துவதிலும் லங்கா பிறீமியர் லீக் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வீரர்களின் வரைவு வெற்றிகரமாக முடிவடைந்திருப்பது தொடருக்கான ஆயத்தப் பணிகளில் ஒரு சாதகமான படியாகும். வீரர்கள், ரசிகர்கள், அணிகள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டுப் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் ஒரு தளமாக லங்கா பிறிமியர் லீக் தொடரை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் தொடர் முயற்சிகளை நான் வரவேற்கிறேன்.” என தெரிவித்தார். 

இதுதொடர்பில் லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல கருத்து தெரிவிக்கையில், “2026 லங்கா பிறீமியர் லீக் வீரர்கள் வரைவு நிறைவடைந்திருப்பது, இந்தத் தொடரின் வலுவான ஆறாவது அத்தியாயத்தை நடத்துவதற்கான ஒரு முக்கியப் படியாகும். பல்வேறு பிரான்சைஸ் அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் தரம், லங்கா பிறீமியர் லீக் தொடரின் வளர்ந்து வரும் ஈர்ப்பையும், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த லீக் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. பலம் வாய்ந்த அணிகள் உருவாகி வருவதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது, இது இந்தத் தொடருக்கும் இலங்கை கிரிக்கெட்டிற்கும் குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்க்கும்,” என்றார். 

IPG நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன் பேசுகையில், “இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, அணி உரிமையாளர்கள் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களின் பங்களிப்போடு 2026 லங்கா பிறீமியர் லீக் வீரர்களின் வரைவு நிகழ்வை வெற்றிகரமாக முடித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த வரைவு, இலங்கையின் திறமையாளர்கள், சர்வதேச அனுபவம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களின் ஒரு சிறந்த கலவையை ஒன்றிணைத்துள்ளது, இது ஒரு உயர்தர டி20 லீக்கிற்கு மிகவும் அவசியமானதாகும். எங்களின் தற்போதைய கவனம், இந்த வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும், வணிக ரீதியாக வலுவான மற்றும் ரசிகர்களை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த தொடரை வழங்குவதாகும்.” என்று குறிப்பிட்டார். 

கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி ஒளிபரப்பு, வணிக ஆதரவுகள் மற்றும் சுற்றுலாத்துறை எனப் பல தளங்களில் 2026 லங்கா பிறீமியர் லீக் தொடர் இலங்கைக்குப் பெரும் மதிப்பைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்தொடர் இலங்கை வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து ஒரு தொழில்முறை டி20 சூழலில் போட்டியிடுவதற்கான சிறந்த வாய்ப்பையும் வழங்கும்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278