Header Logo
SLIC
செய்திகள்
உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இரு மாணவர்கள்!

Aug 27, 2026 - 10:36 PM

உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இரு மாணவர்கள்!
Mobitel Inner 1278
EDEX Inner

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரிதத் தலையீட்டினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் மற்றும் 8ஆம் தரங்களில் கல்வி பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த மாணவர்கள் தமது வீட்டிற்கு மேற்புறத்தில் அமைந்துள்ள புதர்க்காட்டுப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காக ஏறியுள்ளனர்.

 

இதன்போது, அந்த மரத்திற்கு மேலாகச் சென்றிருந்த உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பிகள் மரத்துடன் உரசிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதன் காரணமாக மரம் முழுவதும் மின்சாரம் கசிந்த நிலையில், மரத்தின் மீது இருந்த இரு மாணவர்களுக்கும் திடீரென மின்சாரத் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

பின்னர் இரு மாணவர்களும் உடனடியாக வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பொலிஸாரின் துரிதமான தலையீட்டினால் மாணவர்கள் இருவரும் சரியான நேரத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதால், அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278