Aug 10, 2026 - 01:40 PM

வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினரும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், புத்தளம் முள்ளிபுரம் பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றை சோதனை இட்டபோது இந்த சட்டவிரோத சிகரெட்கள் கைப்பற்றப்பட்டன.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 சட்ட விரோத சிகரெட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 49 வயதுடைய ஒருவர் எனவும் இவர் நுரைச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.













