Aug 11, 2026 - 10:21 AM

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (11) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.













