Aug 11, 2026 - 01:42 PM

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது நடவடிக்கை அக்கரைப்பற்று - சாகாமம் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.













