Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கிற்கு திகதி நிர்ணயம்

Aug 17, 2026 - 02:25 PM

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கிற்கு திகதி நிர்ணயம்
Mobitel Inner 1278
EDEX Inner

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினர் தொடர்பான வழக்கொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் போது கொழும்பு கறுவாத் தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது, விசாரணைகளை மேற்கொள்ளும் கறுவாத் தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு, ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

இதற்கமைய, இந்த வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் குறித்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.


MOST READ

காணொளி
இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

Mobitel 1278