Aug 18, 2026 - 03:59 PM





தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் இன்று (18) பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி இன்று நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய, SC/SD/31/2026 எனும் இலக்கத்தின் கீழ் இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கவனம் திரும்பியுள்ளதோடு, அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு உயர் நீதிமன்றத்தை நாடியது.
அரசியலமைப்பிற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில், அதிகாரப் பகிர்வில் மற்றும் மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி ஆழமாகக் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக் காட்டுகிறது.

























