Aug 18, 2026 - 04:08 PM





அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 22வது திருத்தச் சட்ட மூல வரைவுக்கு எதிராக Free Lawyers அமைப்பினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அதனை நிறைவேற்றுவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையினாலும் ஜனநாயக ரீதியிலான சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி, அவ்வமைப்பின் தலைவரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அவர்களால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

























