Aug 18, 2026 - 11:34 AM



இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு விட்டு கூலி தொழிலாளிகள் சிலர் உழவு இயந்திரத்தில் சொந்த ஊரான, உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அந்த வாகனம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் பிந்த் மாவட்டத்தில் பிந்த்-குவாலியர் தேசிய நெடுஞ்சாலையில் சிம்கா கிராமம் அருகே வந்தபோது, வீதியில் கால்நடைகள் படுத்திருந்தன.
இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி அவற்றின் மீது மோதி விடாமல் இருக்க முயன்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்த லொறி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
அத்துடன் விபத்தில் 32 பேர் வரை காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

























