Aug 18, 2026 - 11:58 AM



கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, இலஞ்ச ஊழில் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு பூராகவும் உள்ள மீன் விற்பனை நிலையங்களை நிறுவுவதிலும் பராமரிப்பதிலும் உரிய கொள்முதல் (Procurement) நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹீல் சேனாரத்ன, 2010 - 2012 காலப்பகுதியில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

























