Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
பளையில் நடப்பது என்ன? - போலிச் செய்தியால் வௌிவந்த உண்மை

Aug 20, 2026 - 06:12 AM

பளையில் நடப்பது என்ன? - போலிச் செய்தியால் வௌிவந்த உண்மை
Mobitel Inner 1278
EDEX Inner

பளை பகுதியில் தமீழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த விடயங்கள​ைபொலிஸார் அறிக்கை ஒன்றின் ஊடாக வௌிப்படுத்தியுள்ளனர். 

அதன்படி, குறித்த காணொளிக்கு அமைய, அந்த இடமானது கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான கண்ணகிபுரம் மேற்கு, முக்கொம்பன் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

பளை பகுதியில் உள்ள அடர்ந்த காட்டை அழித்து 3 மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது விடுதலைப் புலிகளின் முகாம் எனவும், இங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் சந்தேகநபர் காணொளியில் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

அவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் அடிப்படையற்ற மற்றும் போலியானது என முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அந்த இடத்தை மையமாகக் கொண்டு வெடிபொருட்கள் உற்பத்தி, சட்டவிரோத பொருட்கள் உற்பத்தி அல்லது குண்டு தயாரிப்பு இடம்பெறுவதாக விசாரணைகளில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என பொலிஸார் குறித்த அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளனர். 

மேலும், விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்பு அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான போர் பயிற்சி நிலையமாக அந்த இடம் பராமரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் போலியான தகவல்களை வௌியிட்ட பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர். 

பின்னர் அவர் நேற்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278