Aug 21, 2026 - 09:03 PM





பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு ஆரம்ப சட்டச் செலவாக 9.5 மில்லியன் பவுண்ஸ்களைச் செலுத்துமாறு இளவரசர் ஹெரி உட்பட ஆறு பிரமுகர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தனியுரிமை மீறல் வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

























