Aug 22, 2026 - 12:35 AM





காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.
நாவலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
நந்தா மாலினியின் பூதவுடலின் இறுதிக் கிரியைகள் நாளை (22) பொரளை பொது மயானத்தில் பி.ப 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

























