Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

Aug 21, 2026 - 09:40 AM

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது
Mobitel Inner 1278
EDEX Inner

20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே, இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபரிடம் இருந்த முழுமையான அளவிலான ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மாத்திரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து சிறிய தண்டனைக்கு உட்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் அவருக்கு இடையூறின்றி செயற்பட இடமளிப்பதற்குமாகவே இந்தப் பணம் கோரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொலிஸ் பரிசோதகர் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தினுள்ளும், பொலிஸ் கான்ஸ்டபிள் கல்முனையிலும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதனையடுத்து, சந்தேக நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278