Header Logo
SLIC
செய்திகள்
செப்டம்பர் 8 முதல் 11 வரை பாராளுமன்றம் கூடவுள்ளது

Aug 28, 2026 - 07:22 PM

செப்டம்பர் 8 முதல் 11 வரை பாராளுமன்றம் கூடவுள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

பாராளுமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. 

சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (20) நடைபெற்ற பாராளுமன்றப் அலுவல் குழுக் கூட்டத்தில் குறித்த வாரத்திற்கான பாராளுமன்றப் அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்றப் அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான காலம் வாய்மூல விடை எதிர்பார்க்கும் வினாக்களுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை (203 ஆம் அதிகாரத்தின் கீழ்) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இலக்க 2489/22 மற்றும் 2493/19 ஆகிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகளையும் அங்கீகரிப்பதற்கான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 9 புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 

மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 வரையிலான காலம் பிரதமரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையிலான காலம் வாய்மூல விடை எதிர்பார்க்கும் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னர் மு.ப 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாதுகாப்பு பதவி நிலை பிரதானி (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது. 

பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளை வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278