Sep 1, 2026 - 04:38 PM

1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் படிமுறைகள் அமுல்படுத்தப்படுவதை நிர்வகிக்கின்ற இலங்கையிலுள்ள முக்கிய சட்டமாகும்.
ஆயினும், உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிலும் தற்போது ஆட்களின், பண்டங்களின் மற்றும் சேவைகளின் தொழிற்பாடுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளமையால், தொடர்ந்து இயங்கிவரும் உலகளாவிய விஜயங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தால் தொற்று நோய்கள் நாடுகளுக்கிடையே வேகமாகப் பரவி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அதற்கமைய, 1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆயினும், குறித்த திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கமைய, கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள 4 தொற்றுநோய் நிலைமைகளின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து, சமகால சுகாதார சவால்களுக்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் பொருத்தமான திருத்தங்களை முன்மொழிவதற்கான மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



























