Sep 14, 2026 - 05:50 PM

வைபவ் சூரியவன்ஷிக்கு முன்பே சச்சினுடன் ஒப்பீடு செய்யப்பட்ட இந்திய வீரர் தனது 18 வயதில் மரணமடைந்தார்.
கிரிக்கெட்டில் சாதனை வீரர்கள் எப்போதும் நினைவுகொள்ளப்படுவார்கள். ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன.
அப்படியான விதிவிலக்கான வீரரின் நினைவே இந்த தொகுப்பு. வளர்ந்து வரும் ஷார்ட் பார்மெட் கிரிக்கெட் தொடர்களால் பல வீரர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக வைபவ் சூரியவன்ஷியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியின் தற்போதைய செல்லப் பிள்ளை சூர்யவன்ஷி தான்.
குறைந்த காலத்தில் இந்திய அணியில் களமாடத் தொடங்கியிருக்கிறார் அவர். கிரிக்கெட்டில் சாதனை வீரர்கள் எப்போதும் நினைவுகொள்ளப்படுவார்கள். ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. அப்படியான விதிவிலக்கான வீரரின் நினைவே இந்த தொகுப்பு. வளர்ந்து வரும் ஷார்ட் பார்மெட் கிரிக்கெட் தொடர்களால் பல வீரர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக வைபவ் சூரியவன்ஷியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியின் தற்போதைய செல்லப் பிள்ளை சூர்யவன்ஷி தான். குறைந்த காலத்தில் இந்திய அணியில் களமாடத் தொடங்கியிருக்கிறார் அவர்.
ஆனால் வைபவ் சூர்யவன்ஷிக்கு முன்பே 13 வயதில் இந்திய கிரிக்கெட்டில் கலக்கி வந்த ஒரு சிறுவன், அப்போதே சச்சினுடன் ஒப்பிடப்பட்டார். அவர் தான் பஞ்சாபைச் சேர்ந்த துருவ் பாண்டவ். 1987 ஆம் ஆண்டு, தனது 13 வயதில் முதல் தரப் போட்டிகளில் அறிமுகமான துருவ், ஒரு கிரிக்கெட் வீரராக தனது 14 வயதில் சதம் அடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
1988 ஆம் ஆண்டு ரஞ்சி கிண்ணத்தில் பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதவிருந்தது. துருவ் பாண்டவிற்கு அது இவ்வளவு பெரிய நாளாக அமையும் என்று அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை. அந்த சமயத்தில் துருவ்விற்கு 14 வயதுதான். அவர் தனது மூன்றாவது போட்டியிலேயே சதம் அடித்திருந்தார். ஒரு போட்டியில் மொத்தம் 137 ஓட்டங்களை குவித்தார். அதன் பிறகு, பலர் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடத் தொடங்கினர்.ை
இதன்பின் 1991 இல் சர்வீசஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக துருவ் 170 ஓட்டங்களை எடுத்தார். இது ரஞ்சி டிராபியில் அவரது அதிகபட்ச ஸ்கோர். இந்தக் காலகட்டத்தில், தனது 17 வயது மற்றும் 341 நாட்களில் கிரிக்கெட்டில் 1,000 ஓட்டங்கள் என்கிற சாதனையை துருவ் நிகழ்த்திய போட்டியே அவரது கடைசி ரஞ்சி டிராபி போட்டியாக அமைந்தது.
தியோதர் கிண்ணத்தில் போட்டியில் பங்கேற்றுவிட்டு பாட்டியாலாவுக்கு வாடகைக் காரில் சென்று கொண்டிருந்தார் துருவ். அவர் பயணித்த கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுநருடன் சேர்ந்து துருவ் பாண்டவ்வும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்தியா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை இழந்தது. துருவ் பாண்டவ் இறந்தபோது அவருக்கு வயது 18 மட்டுமே.





























