Sep 18, 2026 - 12:18 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியாவை அவசர கதியில் களமிறக்க விரும்பவில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும், அவரை முழுநேர ஆல்-ரவுண்டராக பங்களிக்கும் வகையில் முழு உடற்தகுதி பெற்ற பிறகே ஹர்திக் அணியில் இடம்பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
50 ஓவர் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளருக்கான முழு ஒதுக்கீடான 10 ஓவர்களை வீச ஹர்திக் பாண்டியா இன்னும் தயாராகவில்லை என்றும், இந்த நட்சத்திர ஆல்-ரவுண்டரை சர்வதேச கிரிக்கெட்டில் அவசரப்பட்டு மீண்டும் களமிறக்க மாட்டோம் என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
இந்தியாவின் குறைந்த ஓவர் கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கமாக திகழும் பாண்டியா, அவரது உடல் தகுதி மற்றும் பணிச்சுமை காரணங்களால் பெரும்பாலும் கவனமாகவே கையாளப்பட்டு வருகிறார்.
பாண்டியா பந்துவீசுவதற்கான முழு உடல் தகுதியை எட்டியதும், அவரும் இளம் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியும் ஒரே நேரத்தில் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கம்பீர் குறிப்பிட்டார்.
"ஹர்திக் பாண்டியா தற்போதைய நிலையில் 10 ஓவர்கள் பந்துவீச முடியாது. அவரை சர்வதேச கிரிக்கெட்டில் அவசரப்பட்டு களமிறக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு உடல் தகுதி பெற்ற பிறகு, அவரும் நிதிஷும் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது," என்று கம்பீர் கூறினார்.





























