Feb 3, 2026 - 08:21 AM -
0
பங்களாதேஷூக்கு ஆதரவாக டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால் பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மொத்தமாக தடை விதிக்கவும் பாகிஸ்தானின் அணியின் நிதி ஆதாரங்களை முடக்கவும் ஐ.சி.சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இதில் 'சி' பிரிவில் பங்களாதேஷ் அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த பங்களாதேஷ் அணி, உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பங்களாதேஷிற்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.
இலங்கையில் டி-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் சபை, பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

