Feb 5, 2026 - 01:31 PM -
0
டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணித்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி 300 கோடி ரூபா அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருமானத்தையும் தடுத்து நிறுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் T20 உலகக் கிண்ணத்தில் ஆடுவோம் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

