விளையாட்டு
டி-20 உலகக் கிண்ண தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

Feb 7, 2026 - 11:18 AM -

0

டி-20 உலகக் கிண்ண தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 

இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை இன்று இரவு எதிர்கொள்கிறது. 

முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி ஆட்டத்தின்போது ஹர்சித் ராணாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. 

இதனால் அன்றைய போட்டியின்போது நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அத்துடன், காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால் அவர் முழுமையாக குணமடையாததால், டி-20 உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அவரது காயம் குறித்து பேசிய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், ஹர்சித் ராணா விளையாடாடது அணிக்கு பின்னடைவு என்று கூறினார். 

ஹர்சித் ராணா விலகும் நிலையில், மாற்று வீரராக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05