May 6, 2026 - 06:18 PM -
0
யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சித்தப்பாத்தி இந்து மயான பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தின் 9 ஆம் நாளான இன்று (06) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம்லெனின் குமார் முன்னிலையில் இடம்பெற்றன.
இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, புதிதாக ஒரு மனித மண்டையோட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளை அவதானித்து வரும் சட்டத்தரணி கைலாயநாதன் சுபாகர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை, மொத்தம் 252 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--
