Header Logo

செய்திகள்
முடிவுக்கு வரும் போர் - ஈரானின் மறைமுக வௌிப்படுத்தல்!

May 6, 2026 - 07:06 PM -

0

முடிவுக்கு வரும் போர் - ஈரானின் மறைமுக வௌிப்படுத்தல்!

ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைச் சூட்சுமமாகத் தெரிவித்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் முழுமையான அர்த்தம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஈரானிய விதிமுறைகளின்படி ஹோர்முஸ் நீரிணையை கடப்பதில் ஒத்துழைப்பு வழங்கிய கப்பல் உரிமையாளர்களுக்கு IRGC தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. 

ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவதுடன், புதிய நடைமுறைகளின் கீழ், இந்த நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் நிலையான பயணத்திற்கான வாய்ப்பு வழங்கப்படும். 

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட 'புரொஜெக்ட் ஃப்ரீடம்' நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணித்தியாலங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!