Header Logo

செய்திகள்
கொழும்பில் அமுலாகவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்

May 7, 2026 - 12:34 AM -

0

கொழும்பில் அமுலாகவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மே 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மே 7 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வியட்நாம் ஜனாதிபதியின் கொழும்பு நோக்கிய வருகையின் போதும், மே 8 ஆம் திகதி முற்பகல் மற்றும் பிற்பகல் ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம், பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களுக்கான உத்தியோகபூர்வ பயணங்களின் போதும் இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்ட நேரங்களில் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம். 

வியட்நாம் ஜனாதிபதியின் வருகைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் குறித்த வழிகளில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை விதிக்கப்படும். 

ஜனாதிபதியின் வாகனத் தொடரணி கடந்து செல்லும் போது ஏனைய வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். 

இதேவேளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!