Header Logo

செய்திகள்
குருநாகல் மாநகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பதவி விலகல்

May 7, 2026 - 07:09 AM -

0

குருநாகல் மாநகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பதவி விலகல்

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

 

இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06) தன்னிடம் கையளித்ததாக குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து குறிப்பிட்டுள்ளார்.

 

மாநகர சபைக்குள் நிலவும் முறையற்ற நிர்வாகம், மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயங்களைக் குறைக்க முடியாமையினால் தாம் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

 

குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கோட தொகுதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று இவர் மாநகர சபைக்குத் தெரிவாகியிருந்தார்.

 

அங்கீகரிக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டுமானங்கள், முறையற்ற எரிபொருள் பயன்பாடு, முறையற்ற மேலதிக நேர கொடுப்பனவுகள், சேவைக்கு வருகை தந்துவிட்டு இடையில் வெளியேறுதல், நகரை சுத்தமாக பராமரிக்க முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தான் பதவி விலகுவதாக பிரேமச்சந்திர தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!